சேலம்: மழை நீர் வடிகால் பணிகளில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் பள்ளங்களை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். என் தலைமையில்தான் அதிமுக செயல்படும். அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் அனைத்து உரிமைகளையும் வழங்கி உள்ளது. அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு இல்லம் தேடி பதவி வரும் என்றும் கூறினார்.