கேரளாவில் மழை தொடர்கிறது; 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. ஒரு சில நாட்கள் இடைவேளை இருந்தபோதிலும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி இன்று இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து நாளை இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், 6ம் தேதி திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு உள்பட 6 மாவட்டங்களுக்கும், 7ம் தேதி மலப்புரம், கோழிக்கோடு உள்பட 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்றும், இடி, மின்னலும் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரூ.4620 கோடி முதலீடு மோசடி ஹிஜாவு நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு வெறும் ரூ.7,425 கோடி மட்டுமே: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு