ஒன்றிய அரசிடம் இருந்து உடனடி நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஒன்றிய அரசின் குழுவும், மாநில மழை சேதத்தை பார்வையிட்டுள்ளது. 2022-23ம் ஆண்டு பேரிடர் நிதியில் இருந்து, நிலுவையில் உள்ள 315 கோடி ரூபாயை விடுவிக்க ஒன்றிய அரசிடம் கோரியுள்ளோம். வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், மின்சாரம், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதால், அதனை சீரமைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன’ என்றார்.