நெல்லை: மழை வெள்ள பாதிப்புகளில் தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு பணி சிறப்பாக உள்ளதாக மத்திய குழு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவை சேர்ந்த அதிகாரி பாலாஜி பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை 2ம் கட்டமாக மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.