சென்னை: மழை பாதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பல ஆயிரம் கிலோ மலர்கள் அழுகி சேதமடைந்தன. கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் மழையால் அழுகிய பூக்கள் குவியல் குவியலாக கிடப்பதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். நறுமணம் வீசும் மலர்ச்சந்தையில் துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. அழுகிய மலர்களை கொட்ட இடமின்றி வியாபாரிகள் குவித்து வைத்துள்ளனர்.