சில இடங்களில் சாலை தடுப்புகள் சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்து உபரிநீர் வருவது முற்றிலும் நின்று விட்டது. இதையடுத்து சேதமடைந்த சாலைகளில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேதமடைந்த சாலைத்தடுப்புகளை சரிசெய்து வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.