மழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் விரைவு ரயில் நடுவழியில் நிற்பதால் 1,000 பயணிகள் பரிதவிப்பு..!!

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் விரைவு ரயில் நடுவழியில் நிற்பதால் 1,000 பயணிகள் பரிதவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளம் மூழ்கியதால் நேற்று இரவு 9.20 மணி முதல் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் ரயிலில் இருந்து வெளியே இறங்க முடியாமல் பயணிகள் பரிதவிப்பு. ரயில் பயணிகள் உதவி கோரியுள்ள நிலையில் பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிவகங்கை அருகே இரட்டை கொலை

புதிதாக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்தது: சாலையோர வியாபாரி மீது பாய்ந்த முதல் வழக்கு

புதிய விண்வெளி கொள்கையை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு