தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நெல்லையில் முகாம்களில் தங்கி இருப்பவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். பள்ளிக்கூடத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்களிடம் அவர் நலம் விசாரித்தார்.