சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, அரியலூர், குமரி மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளது.