மதுரை: ரயில்களை பராமரிப்பதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டுவதாக ஐகோர்ட் மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. முகம் சுளிக்கும் நிலையில்தான் ரயில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன. கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சிய போக்கையே ரயில்வே துறை காட்டுகிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.