இதுகுறித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த நாட்களுக்கு முன், இதே பகுதியில் கிஷோர் மற்றும் பிரபு ஆகிய இருவரது செல்போன்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. ஒரே நபர் இந்த செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுகிறாரா என சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.