ஜம்மு காஷ்மீரில் கத்ரா – பனிஹால் பிரிவில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் செனாப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் உயரம் 359 மீட்டர் ஆகும். அதாவது, பாரிஸில் இருக்கும் ஈஃபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம் உயரம் கொண்ட ரயில் பாலமாகும்.