விசாரணையில் அவர் செங்குன்றம், அண்ணா நகர், கரிகாலன் தெருவைச் சேர்ந்த ஜெயராம்(27) என்பதும் இவர் ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரிய வந்தது. சுற்றுவட்டார பகுதியில் பைக்கில் சென்று ஜெயராம் பெருங்காயம் விற்பனை செய்து வந்தார். சம்பவத்தன்று, மருத்துவமனைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர், இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது சென்னை சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. இறந்த ஜெயராமுக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஒரு மகள் உள்ளனர்.