இதையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து சென்று காஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தினர். அது காலி சிலிண்டர். அந்த நேரத்தில் அந்த தடத்தில் ரயில் எதுவும் வரவில்லை என்பதால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. ரயில் தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் கண்டெடுக்கப்பட்டது ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.