பேசிக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடந்தபோது மின்சார ரயிலில் சிக்கி கேரள காதல் ஜோடி பலி:வேலை தேடி சென்னைக்கு வந்தவர்கள்

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி – பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு ஜோடி பேசிக்கொண்டே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியது. இதில் ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற பெண் படுகாயம் அடைந்தார்.தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பலியானவரின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுங்காயம் அடைந்த பெண்ணை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பலியானவர்கள் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷரீப் (35), கோழிக்கோடை சேர்ந்த ஐஸ்வர்யா (28) என்பதும், காதலர்களான இவர்கள் வேலை தேடி நேற்று முன்தினம் காலை சென்னைக்கு வந்ததும் தெரிய வந்தது. இரவு நண்பரின் வீட்டில் தங்குவதற்காக இருவரும் சென்றுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக பேசிக்கொண்டே கடந்தபோது மின்சார ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் பலியான ஐஸ்வர்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

Related posts

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை