அவரது பாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ஊசியை விழுங்கிவிட்டதாகக் கூறி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் நேற்று காலை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
தன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் செம்பியம் காவல் நிலைய போலீசார் தன்னை தேடி வருவதாகவும், அவர்கள் தன்னை பிடித்து விடுவார்கள் என்று நினைத்து போதையில் ஊசியை விழுங்கி விட்டதாகவும் தினேஷ் கூறியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.