புதுடெல்லி: டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சூப்பர் டெக் என்ற மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ராம் கிஷோர் அரோரா நடத்தி வந்தார். இந்நிறுவனம் வீடு வாங்க பணம் கொடுத்த 670 பேரிடம் ரூ.164 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ராம் கிஷோர் அரோரா கடந்த ஜுன் 29ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் டிஎல்எஃப் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.