இவர்களின் செயலானது, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பிரசாரம் செய்த விதத்தை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். மோடியின் அரசியல் தந்திரம் மூன்று மாநிலங்களில் அக்கட்சிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. ஆனால், தெலங்கானாவில் பாஜகவால் எதையும் சாதிக்க முடியவில்லை. மத்திய பிரதேசத்தில் கூட தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது 199 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஆனால் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோதுதான் முடிவுகள் மாறின. காங்கிரஸ் கட்சியால் மோடியைத் தோற்கடிக்க முடியாது என்று பிரசாரம் செய்யப்படுவதும் ஒரு பொய்யான கருத்துதான். காங்கிரஸ் முதல்வராக இருந்த அசோக் கெலாட், பூபேஷ் பகேல் ஆகியோர், வலுவான போட்டியை அளிக்காமல் இருந்ததால் தான் பாஜக வெற்றி பெற்றது’ என்று கூறியுள்ளார்.