சபாநாயகரின் செயல் ஜனநாயகத்துக்கு விரோதமானது .அவை விதி எண் 380-ன் படி நீக்கத் தேவையற்ற பகுதிகளையும் எனது உரையிலிருந்து சபாநாயகர் நீக்கியுள்ளார். நாடாளுமன்ற அவை விதி 380ஐ எந்த வகையிலும் நான் மீறவில்லை. மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையைத்தான் தான் நிறைவேற்றியுள்ளேன். மக்களின் பிரச்னைகளை பேசுவதற்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் உரிமை உள்ளது. அரசமைப்பு சட்டத்தில் 105(1) பிரிவின் கீழ் ஒவ்வொரு, எம்.பி.க்கும் பேச்சுரிமை உள்ளது.மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது எம்.பிக்களின் கடமை. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.