ராகுல் காந்தி நாட்டை வழி நடத்துவார்: சச்சின் பைலட்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், நேற்று அளித்த பேட்டியில் ராகுல் காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னணியில் நின்று வழிநடத்துகிறார். அரசாங்கத்திடம் பதில் இல்லாத பொருத்தமான கேள்விகளை அவர் கேட்கிறார். அவர் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணை க்கும் தலைவர்.ராகுல் காந்தி மக்களின் முக்கியமான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கிறார்.

நாங்கள் அனைவரும் ராகுல் காந்தியை நாட்டை வழிநடத்தும் ஒரு தலைவராகப் பார்க்கிறோம், அடுத்த தேர்தல் நடக்கும்போது, ​​இந்திய மக்களும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ராகுல் காந்தியின் பின்னால் ஒற்றுமையாக நிற்கும். நடைபெற உள்ள அரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக பெரிய வெற்றியை பெறும். அதை தொடர்ந்து நடைபெற உள்ள மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்’’ என்றார்.

 

Related posts

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்

எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை