நாங்கள் அனைவரும் ராகுல் காந்தியை நாட்டை வழிநடத்தும் ஒரு தலைவராகப் பார்க்கிறோம், அடுத்த தேர்தல் நடக்கும்போது, இந்திய மக்களும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ராகுல் காந்தியின் பின்னால் ஒற்றுமையாக நிற்கும். நடைபெற உள்ள அரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக பெரிய வெற்றியை பெறும். அதை தொடர்ந்து நடைபெற உள்ள மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்’’ என்றார்.