டெல்லி : நீட் தேர்வு முறைகேடு குறித்து ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் பேரழிவு நடந்துள்ளது, வினாத்தாளை கசியவிட்டு சிலர் ஆயிரம் கோடி குவித்துள்ளனர் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.