டெல்லி :அண்மையில் நடந்த மக்களவை தேர்தல் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் நடக்கவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். மக்களவை தேர்தல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு நடந்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆதாயம் அடைந்த பாஜக அரசு, காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கியது என்றும் ராகுல் சாடினார்.