கவுகாத்தி : அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இயக்குவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் 11வது நாள் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் என்றால் அது அசாம் முதல்வர்தான் என்றும் மதம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் தேசத்தை பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது என்றும் ராகுல் தெரிவித்தார்.