சண்டிகர் : தொழிலதிபர் அம்பானி தனது வீட்டு திருமணத்திற்கு செலவு செய்தது மக்களின் பணம் என்று ராகுல்காந்தி பேசி உள்ளார். ஹரியானா தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் மட்டுமே கோடிகளில் செலவு செய்து திருமணத்தை நடத்தலாம். நாட்டில் ஒரு விவசாயி கடன் வாங்கி மட்டுமே திருமணம் நடத்த முடியும் நிலை உள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ. 500க்கு தரப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.