மற்றொரு பாஜ தலைவர் தர்விந்தர் சிங் வர்மா இந்திராகாந்திக்கு ஏற்பட்ட நிலைதான் வரும் என பேசியுள்ளார். ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, உபி மாநில அமைச்சர் ரகுராஜ் ஆகியோர் ராகுல்காந்தியை பயங்கரவாதி என பேசியுள்ளனர். எனவே, இந்த 5 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்பியை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ராகுல்காந்தியை பார்த்து பாஜவினர் நடுங்குகின்றனர். பெரும்பான்மை இல்லாத பாஜ ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்காது. ராகுல்காந்தி விரைவில் பிரதமர் ஆவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.