ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் சர்ச்சை கருத்து: நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

டெல்லி: மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தியை நம்பர் ஒன் தீவிரவாதி என்று அண்மையில் ரவ்நீத் சிங் பிட்டு கடுமையாக விமசித்து இருந்தார். அவருடன் மேலும் சில பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியை விமர்சித்து இருந்த நிலையில் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த எம்.எல் ஏ. சஞ்சய் கெய்க்வாட், ராகுலின் நாக்கை வெட்டுபவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்து கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் அமைச்சர் ரவ்நீத் சிங்கின் உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கங்கள் எழுப்பின. ஆந்திராவில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தி சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் அமர்ந்து பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக கொலைக்கு மிரட்டல் விடுத்து வரும் பாஜக தலைவர்களுக்கு எதிராக டெல்லி காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவும் அக்கட்சியினர் போலீசாரை கேட்டு கொண்டுள்ளனர்.

Related posts

குரூப் 4 பணியிடம் உயர்வு.. அடுத்த மாதம் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்!!

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: கருத்து கேட்பு

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு ரூ818 கோடிக்கு மது விற்பனை: கடந்த வருடத்தை விட அதிகம்