எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்து நேற்று பீகார் முதல்வராக 9வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்று இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் நேற்று ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை பூர்ணியா மாவட்டத்திலும் நாளை மறுநாள் கார்திகார் மாவட்டத்திலும் அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இவை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வலுவான மாவட்டங்கள் என்பதால் பீகாரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ராகுல் மேற்கு வங்கத்தில் பயணித்த போது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ஜேடியு கட்சி, அவரது பயணம் பீகாரை தொடும் போது, பாஜக பக்கம் சாய்ந்துவிட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பீகாரில் ராகுல் காந்தியின் பயணம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.