இதையடுத்து சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் சுற்றித்திரிந்த 25 நாய்களை பிடித்து, புளியந்தோப்பு நாய்கள் இனக் கட்டுப்பாடு மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.ஒரு வாரத்திற்கு பின் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டு, பின்னர் பிடித்த இடத்திலேயே விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ராயபுரத்தில் 29 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேருக்கும் 5 டோஸ் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.