தமிழ்நாடு கனிம நிறுவனத்தில்(டாமின்), ரூ.1 கோடி செலவில் புதிய வணிக மேலாண்மை மென்பொருள் உருவாக்கி, குவாரிகளின் செயல்பாட்டினை துல்லியமாக கண்காணிக்கவும், திறனாய்வு செய்யவும், புதிய திட்டங்களை தீட்டவும் ஏற்பாடு செய்யப்படும்.
தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) மூலம் வேலூர் மாவட்டம், மகிமண்டலம் சுரங்கப்பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் 3000 மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.
தமிழ்நாடு கனிம நிறுவனம் மூலம் ராணிப்பேட்டை மாவட்டம் ரெண்டாடி கிராமத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடமும், ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டியும் அமைத்து தரப்படும்.
தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் ரூ.12 லட்சத்தில் செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கக்கூடிய கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் கொள்முதல் செய்யப்படும்.
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் (டான்மேக்) ரூ.40 லட்சத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.