Monday, September 23, 2024
Home » திறமையான ஆசிரியரின் குணங்களும் பண்புகளும்

திறமையான ஆசிரியரின் குணங்களும் பண்புகளும்

by Nithya

கற்பித்தல்-கற்றல் சூழ்நிலையில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. மேலும் ஆசிரியர்களின் குணங்கள் மற்றும் பண்புகள் கற்றல் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நல்ல ஆசிரியரின் சில அத்தியாவசியக் குணங்களாக உத்வேகம், பொருந்தக்கூடிய தன்மை, வாழ்நாள் முழுவதும் கற்பது, உற்சாகம், கிரியேட்டிவ், பச்சாதாபம், தகவல் தொடர்புத்திறன் ஆகியவற்றைச் சொல்லலாம்.

உத்வேகம்: சிறந்த ஆசிரியர்கள் மாணவர்களைக் கல்வி ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஊக்குவிக்கிறார்கள். உத்வேகம் அளிக்கும் விதமாக பல முன்னுதாரணங்களைக் கூறி ஒரு ஆசிரியரின் பங்கை வழிகாட்டியாகக் காட்டுகிறார்கள்.

கற்பித்தலில் மாற்றம்: ஆசிரியர்கள் நெகிழ்வானவர்களாகவும், மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப கற்பித்தலைத் தகவமைத்துக்கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பதோடு, வெவ்வேறு மாணவர்களின் கற்றல் திறன் வேறுபாடுகளை யூகிக்கும் திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

கற்பித்தல் முறைகளைக் கற்றுக்கொள்வர்: மாணவர்களுக்குக் கற்பித்தலில் குறை நிகழாமல் இருக்க தொடர்ச்சியான கற்றல் மற்றும் தொழில்முறை மேம்பாட்டில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தொடர்ந்து தேடுகிறார்கள். சிறந்த கற்பித்தல் நடைமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ள வாழ்நாள் முழுவதும் கற்பவராக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.

படைப்பாற்றல்: திறமையான ஆசிரியர்கள் பாடம் திட்டமிடல் மற்றும் வழங்குவதில் தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்துகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் உற்சாகமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய சூழலை உருவாக்கி, மாணவர்களிடம் கற்றல் திறனை மேம்படுத்தி, படைப்பாற்றலை ஊக்குவிப்பதில் தனித்திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆதரவளித்தல்: திறமையான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் பச்சாதாபம் கொள்கிறார்கள் மற்றும் ஒரு ஆதரவான மற்றும் வளர்க்கும் கற்றல் சூழலை உருவாக்குகிறார்கள். வலுவான உறவுகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கை எடுத்துக்காட்டுகின்றனர்.

நிர்வாகத் திறன்: நல்ல ஆசிரியர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட பாடங்கள், பொருட்கள் மற்றும் வகுப்பறை நடைமுறைகளைப் பராமரித்து, கற்றல் வாய்ப்புகளை அதிகரிக்க, வகுப்பறை நிர்வாகத்தில் ஆசிரியரின் பங்கை எடுத்துக்காட்டுகின்றனர்.

தகவல் தொடர்புத்திறன்: நல்ல ஆசிரியர்கள் வலுவான தகவல் தொடர்பு திறன்கொண்டவர்களாகவும், தகவல்களைத் திறம்பட தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் நேர்மறையான உறவுகளை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கை உறுதி செய்வார்கள்.

இப்படி ஒரு ஆசிரியர் பன்முகத்தன்மையோடு செயல்படும்போதுதான், பல்வேறு விதமான மாணவர்களையும் அவர்களின் தன்மைகளுக்கேற்ப செயல்பட்டு கற்றல்திறனை மேம்படுத்துகின்றனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்களாலும், சமூகத்தாலும் சிறந்த ஆசிரியர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.

– முத்து

You may also like

Leave a Comment

9 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi