கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் , கத்தார் உளவுத்துறை 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த அக்டோபரில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. உளவு பார்த்த குற்றச்சாட்டில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கத்தார் அதிகாரிகளோ அல்லது ஒன்றிய அரசோ வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில்,வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக் ஷி நேற்று கூறுகையில்,‘‘மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் ஏற்கனவே இரண்டு முறை விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் அளித்து வருகிறோம். கடந்த 3ம் தேதி அன்று சிறையில் இருக்கும் எட்டு பேரையும் இந்திய தூதர் சந்தித்தார்’’ என்றார்.