கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 மாஜி கடற்படையினருடன் இந்திய தூதர் சந்திப்பு

புதுடெல்லி: கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கடந்த 3ம் தேதி இந்திய தூதர் சந்தித்ததாக வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் கத்தார் நாட்டில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் , கத்தார் உளவுத்துறை 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த அக்டோபரில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. உளவு பார்த்த குற்றச்சாட்டில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கத்தார் அதிகாரிகளோ அல்லது ஒன்றிய அரசோ வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில்,வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக் ஷி நேற்று கூறுகையில்,‘‘மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் ஏற்கனவே இரண்டு முறை விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் அளித்து வருகிறோம். கடந்த 3ம் தேதி அன்று சிறையில் இருக்கும் எட்டு பேரையும் இந்திய தூதர் சந்தித்தார்’’ என்றார்.

Related posts

தங்கை இறந்த சோகம்: அண்ணன் தற்கொலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு