புழல் விநாயகபுரத்தில் கோயில் உண்டியல் பணம் திருட்டு

புழல்: புழல் அடுத்த விநாயகபுரம் சூரப்பட்டு மெயின் ரோடு மதுரா பெலாவறை கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, வில்லிவாக்கத்தை சேர்ந்த கிரிதரன் (50) பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கோயிலை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று காலை 6 மணி அளவில் கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயிலின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கிரிதரன் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போயிருந்தது. இதில் கோயிலில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கோயில் நிர்வாக உறுப்பினர் ரமேஷ் புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது