சென்னை: போக்சோ வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி கார்த்திக் (27) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கைதி கார்த்திக் உயிரிழந்தார். சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் போக்சோ வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.