சென்னை: புழல் சிறையில் விசாரணை கைதி கமலக்கண்ணன் (46) ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். மோசடி வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த கமலக்கண்ணன் ரத்த வாந்தி எடுத்துள்ளார்.ரத்த வாந்தி எடுத்தவுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி கைதி உயிரிழந்தார்.