சென்னை: புதிரை வண்ணார் நல மக்களுக்கு, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உதவிகளும் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், இதனை கண்காணிக்கவும் அவர்களின் நலனை கருத்திற்கொண்டு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், 3 சட்டமன்ற உறுப்பினர்கள், 10 சமூக ஆர்வலர்கள் / கல்வியாளர்கள் உட்பட 13 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 13 அலுவல்சார்ந்த உறுப்பினர்கள் ஆக மொத்தம் 26 உறுப்பினர்களை கொண்டு புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தியமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.