பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு கிடைத்ததால் எம்எல்ஏவுக்கு பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எம்எல்ஏ உறுதியளித்தார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு, காஞ்சிபுரம் வடக்கு செயற் பொறியாளர் பிரசாத், உதவி செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் வடக்கு பள்ளூர் சர்மிளா, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர், மின்சார துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.