ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு தேங்காய் கொள்முதல்

ஆனைமலை : பொள்ளாச்சி ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் கொள்முதல் நடைபெற்றது. ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை, ஒடையகுளம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 6 விவசாயிகள் 25 மூட்டை என மொத்தம் 16 குவிண்டால் தேங்காய் கொண்டு வந்திருந்தனர்.

இதில் 1 கிலோ தேங்காய் ரூ.22 முதல் அதிக பட்சமாக ரூ.24.30 வரை என சராசரியாக ரூ.24.90க்கு ஏலம் போனது. விவசாயிகள் கொண்டு வந்த மூட்டைகளிலிருந்த தேங்காய் மொத்தம் ரூ.26 ஆயிரத்து 425க்கு விற்பனையானது. இதனை, 6 வியாபாரிகள் வாங்கி சென்றனர். கடந்த வாரம் அதிக பட்சமாக சராசரியாக 1 கிலோ ரூ.22க்கு தேங்காய் ஏலம் போனது. இந்த முறை ரூ.2 கூடுதலாக ஏலம் போனது என ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வேல்முருகன் தெரிவித்தார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி