சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் வெள்ளமாகவே உள்ளது. புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்றே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக நேற்றுமுன்தினம் முதல் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் கோயில் வளாகங்களில் பக்தர்கள் இரவு தங்கி இருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். காலை 8 மணி நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 16 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.