திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாறினாலும், அவலங்கள் மாறவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தெலங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்த சந்து என்ற பக்தர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். நடவடிக்கை எடுப்பதாக கூறி தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை அனுப்பி வைத்தனர். அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு