பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் வயல் வெளியில் ஆளில்லா விமானம்(டிரோன்) நேற்று கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலையடுத்து எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்)வீரர்கள் சக் பாங்கே வாலா என்ற எல்லை கிராமத்துக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது,வயல்வெளி ஒன்றில் டிரோன் கிடந்தது. டிரோனை மீட்ட பாதுகாப்பு படையினர் அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.