பஞ்சாபில் ஆயுத கடத்தல் முறியடிப்பு

சண்டிகர்: பஞ்சாபில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆயுத கடத்தலில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கனடாவை சேர்ந்த தீவிரவாதி லக்பிர் சிங் என்பவரின் கூட்டாளிகள். இவர்களிடம் இருந்து 6 அதிநவீன கைத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அமிர்தசரசில் உள்ள மாநில சிறப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. ஆயுத கடத்தலில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் மேயர் பிரியா

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: ஐகோர்ட் பாராட்டு

14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!