காங்கிரசும், ஆம் ஆத்மியும் பஞ்சாப் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த அரசுகளின் அலட்சியத்தால் நிலஅபகரிப்பு, போதைப்பொருள், மணல் மாபியாக்களின் கூடாரமாக பஞ்சாப் மாறியுள்ளது. இந்த மாஃபியாக்களை ஒடுக்க வேண்டும். பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால், மாபியாக்களை ஒடுக்குவதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்பி வைப்பேன். பஞ்சாபில் பாஜக ஆட்சி அமைந்தால், அடுத்த 48 மணி நேரத்தில் மாஃபியா கும்பல்களை ஒழித்து விடுவோம்’ என்றார்.