விபத்திற்கான காரணங்கள்:
சரக்கு ரயிலுக்காக கட்டப்பட்டுள்ள பாதையில் ஏற்கனவே நிலக்கரி ஏற்றி செல்வதற்காக 2 ரயில் பெட்டிகள் அங்கு நின்றுள்ளது. அதன் எதிர்புரம் சரக்கு ரயிலின் எஞ்சின் மோதியது. உடன் அருகில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீதி சரக்கு ரயிலின் எஞ்சின் விழுந்துள்ளது விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
பயணிகள் நின்றுகொண்டிருந்ததால் பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சரக்கு ரயிலின் எஞ்சின் அகற்றப்பட்டது. உடன் பயணிகள் ரயிலின் எஞ்சின் மாற்றப்பட்டு பிறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.