புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பதாக ஒன்றிய அமைச்சர் முரளிதர் மெஹோஸ் தெரிவித்துள்ளார். சிவாஜிநகர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஸ்வர்கேட் இடையேயான மெட்ரோ ரயில்சேவையை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.22,600கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் புனே வர இருந்த நிலையில் கனமழை காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.