இதைதொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், செந்தில்குமார், நேரு(சுயே) ஆகியோர் தனி நபர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். இதை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் பேசினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு நிச்சயமாக மாநில அந்தஸ்து வேண்டும். அரசு சார்பில் மாநில அந்தஸ்து தர ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை டெல்லி சென்று நேரில் சந்திப்போம். மாநில அந்தஸ்தை பெற்றே தீருவோம் என்றார். இதையடுத்து தனிநபர் தீர்மானங்கள் திரும்ப பெறப்பட்டு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.