தகவலின் பேரில், ஈரோடு வடக்கு போலீசார், மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தினர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தலவாசல் என்ற இடத்தில் கார் சென்றபோது போலீசார் வாகன சோதனையில் மடக்கி பிடித்து, விசாரணை நடத்தினர். அதில், நிஷான் சென்னையில் ஒரு பெண்ணிடம் பழகி வந்த நிலையில், அப்பெண்னை கைவிட்டுவிட்டு ஈரோட்டை சேர்ந்த ரஷியா பானுவை திருமணம் செய்தது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், நண்பர்களான சென்னையை சேர்ந்த சுசீல் சுந்தர் (32), கணேஷ் (31), ஜெகதீஸ் (32), மோகன்ராஜ் (34) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.