மதுரை: புதுக்கோட்டை வி.லட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை ஆட்சியர் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.