புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சமூக விரோதிகளால் பள்ளி கேட், சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கட்டளை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிலர் மது குடிப்பதாக குற்றசாட்டு எழுந்தது. சுற்றுச்சுவர் கேட்டை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் நடத்திய போராட்டதையடுத்து முத்துக்குமார் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.