புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அரசு வாகனம் விபத்துக்குள்ளானதில் வட்டார வளர்ச்சி அலுவலர் படுகாயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அரசு வாகனம் விபத்துக்குள்ளானதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி படுகாயம் அடைந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ராணிமலை ஒன்றியத்தில் கலைச்செல்வி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். அவர் பணி நிமித்தமாக புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு வாகனத்தில் சென்றுள்ளார். ஜீப்பை அரசு ஓட்டுநர் ராஜேந்திரன் ஓட்டியுள்ளார். இவர் விராலிமலையில் இருந்து இலுப்பூர் அருகே வந்த போது ஜீப்பின் முன் சக்கரம் துண்டித்து எதிரே வந்த லாரி மீது உரசி சாலையோர புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்விக்கு பலத்த காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு வாகனத்தை ஓட்டி வந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக இழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து அரசு அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா