புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் பங்கேற்று மிரட்டு நிலை அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவுடன் அமர்ந்து தேநீர் அருந்தி மகிழ்ந்தனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக உள்ள மெர்சி ரம்யா அவர் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். அவருடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மிரட்டு நிலை அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவுடன் அமர்ந்து தேநீர் அருந்தி மகிழ்ந்து ஆட்சியருடன் கலந்துரையாடினர். மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவுடன் நாங்கள் அமர்ந்து தேநீர் அருந்தி மகிழ்ந்தது வாழ்நாளில் மறக்க முடியாது என்று அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கூறியுள்ளனர். ஆட்சியர் கூறிய பல்வேறு ஆலோசனைகள் படிப்பதற்கு உதவியாக இருப்பதாகவும் ஆட்சியரை சந்தித்து கலந்துரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று இதில் கலந்துகொண்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.